பதிவு செய்த நாள்
21 ஜூலை2011
00:10
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில், பங்கு வியாபாரம் தொடங்கியபோது, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மதியத்திற்குப் பிறகு வர்த்தகம் சுணக்கம் கண்டது.ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்த நிலையில், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், மின்சாரம், மருந்து, மோட்டார் வாகனம், வங்கி, பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இருப்பினும், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 151.49 புள்ளிகள் சரிவடைந்து, 18,502.38 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,765.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,473.90 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 26 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 4 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 46.50 புள்ளிகள் குறைந்து, 5,567.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,645.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,555.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|