பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
16:21
மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, எண்ணெய் மற்றும் கேஸ், முதலீட்டு பங்குகள் மற்றும் டெலிகாம் பங்குகள் விலை உயர்ந்ததையடுத்து, மும்பை பங்குச்சந்தைகள் 286 புள்ளிகள் உயர்ந்து 18,722.3 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் 160 புள்ளிகள் உயர்ந்து துவங்கியது. இன்றைய வர்த்தகத்தின் போது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. அந்த கம்பெனியின் பங்குகள் 4 சதவீதம் உயர்ந்தது. இதே போல், ஆக்சிஸ் வங்கியின் பங்குகளும் நல்ல ஏற்றத்துடன் காணப்பட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.., வங்கி, ஐ.டி.எப்.சி., மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவை ஏற்றம் கண்ட பங்குகளில் சில. எனினும் டி.எல்.எப்., ஹிண்டால்கோ போன்ற நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 286.1 புள்ளிகள் உயர்ந்து, 18,722.3 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 92.35 புள்ளிகள் உயர்ந்து 5633.95 புள்ளிகளாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|