பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
01:29
மும்பை:லார்சன் அண்டு டூப்ரோவின் துணை நிறுவனமான, எல் அண்டு டி ஹோல்டிங்ஸ், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சில்லறை வர்த்தகம், நிறுவனங்களுக்கு நிதி உதவி, முதலீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது.இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம், 1,245 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,750 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.ஆனால், பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததால், தற்போது, வெளியீட்டு தொகையை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இப்பங்கு வெளியீட்டை,'புக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்கிறது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலை, 51- 59 ரூபாய் என்ற அளவில், நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு, இம்மாதம் 27ம் தேதி தொடங்கி, 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிறுவனம், கடந்த மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கேப்பிட்டல் இன்டர் நேஷனலுக்கு, 6 கோடி பங்குகளை, 55 ரூபாய் என்ற அளவில் வெளியிட்டு, 330 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. மேற்கண்ட தகவல்களை இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர் ஒய்.எம். தியோஸ்தலி மற்றும் நிறுவனத்தின் பிரசிடென்ட் என்.சிவராமன் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|