விஜயா பேங்க் - எல்.ஐ.சியுடன் கூட்டு திட்டம்விஜயா பேங்க் - எல்.ஐ.சியுடன் கூட்டு திட்டம் ... நேரடி வரி ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக வ‹லாகும்:பிரணாப் முகர்ஜி நம்பிக்கை நேரடி வரி ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக வ‹லாகும்:பிரணாப் முகர்ஜி நம்பிக்கை ...
எல் அண்டு டி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
01:29

மும்பை:லார்சன் அண்டு டூப்ரோவின் துணை நிறுவனமான, எல் அண்டு டி ஹோல்டிங்ஸ், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சில்லறை வர்த்தகம், நிறுவனங்களுக்கு நிதி உதவி, முதலீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது.இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம், 1,245 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,750 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.ஆனால், பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததால், தற்போது, வெளியீட்டு தொகையை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இப்பங்கு வெளியீட்டை,'புக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்கிறது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலை, 51- 59 ரூபாய் என்ற அளவில், நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு, இம்மாதம் 27ம் தேதி தொடங்கி, 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிறுவனம், கடந்த மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கேப்பிட்டல் இன்டர் நேஷனலுக்கு, 6 கோடி பங்குகளை, 55 ரூபாய் என்ற அளவில் வெளியிட்டு, 330 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. மேற்கண்ட தகவல்களை இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர் ஒய்.எம். தியோஸ்தலி மற்றும் நிறுவனத்தின் பிரசிடென்ட் என்.சிவராமன் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)