பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
01:30
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நேரடி வரி வசூல், இலக்கு அளவை விட கூடுதலாக 10ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும் என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நேரடி வரிகள் என்பது, நிறுவனங்கள் அவற்றின் லாபத்தின் அடிப்படையில் செலுத்தும் வரி மற்றும் தனி நபர் செலுத்தும் வருமான வரி ஆகியவற்றை உள்ளடக்கியது.சுங்க வரி, உற்பத்தி வரி,சேவை வரி ஆகியவை மறைமுக வரிகள் பிரிவில் அடங்கியுள்ளன.மத்திய நேரடி வரிகள் வாரியம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக 3.96 லட்சம் கோடி ரூபாய்திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதே போன்று, மறைமுக வரி வசூல் இலக்கு 5.36 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நேரடி மற்றும் மறைமுக வரி மொத்த வசூல் இலக்கு 9.32 லட்சம் கோடி ரூபாய்என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம், நடப்பு நிதியாண்டிற்கான மொத்த வரி வசூல் இலக்கை, மேலும் 10 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். பெருகி வரும் நிர்வாகச் செலவை சமாளிக்கவும், எண்ணெய், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியச் செலவை ஈடு செ#யவும், வரி வ‹லை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் 35ஆயிரம் கோடி ரூபாய்திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசே எதிர்பார்க்காத வகையில், இலக்கை விஞ்சி 1.06 கோடி ரூபாய்திரட்டப்பட்டது.மேலும், சென்ற நிதியாண்டில், நேரடி வரிவசூல் 18 சதவீதமும், மறைமுக வரி வசூல் 40 சதவீதமும் அதிகரித்திருந்தது. நேரடி வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கு அளவான, 4 லட்சத்து 46ஆயிரம்கோடி ரூபாயை எட்டியது.ஆனால், மறைமுக வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கு அளவை விஞ்சி 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இருந்து, 3 லட்சத்து 42ஆயிரத்து 824 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதனால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை பெருமளவு சமாளிக்கப்பட்டது.ஆனால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனத் துறையின் வளர்ச்சி விகிதம் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும், 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நாட்டின் பெருளாதார வளர்ச்சி, 8.6 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என்று, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நேரடி வரி வசூல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது.இத்துடன், மத்திய அரசின் மானியச் செலவும் உயர்ந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில்,நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதம் என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து கருத்து தெரிவித்த பிரணாப் முகர்ஜி, 'தற்போதைய நிலையில், வரி வ‹ல் இலக்கை எட்டுவது கடினம் தான் என்றபோதிலும், கடந்த ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கைகொடுத்தது போல், நடப்பாண்டும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் ஜுலை 20ம் தேதி வரை நாட்டின் மொத்த வரி வசூல், கடந்த ஆண்டு இதே காலத்தை விட 26 சதவீதம் உயர்ந்துள்ளது.சுங்கம் மற்றும் உற்பத்தி வரி வசூல் 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சேவை வரி வசூல், தொய்வில் இருந்து மீண்டு, இதுவரை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால், நடப்பு நிதியாண்டிலும் வரி வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்.நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், நாட்டின் ஏற்றுமதி மிதமான அளவிலேயே இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. எனினும் தற்போது, பலதரப்பட்ட பொருள்களின் ஏற்றுமதிஅதிகரித்துள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சி 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.'இதனால், நடப்பு நிதியாண்டில்,ஏற்றுமதி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்' என்று பிரணாப் முகர்ஜி மேலும் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில்,அன்னிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. சென்ற ஏப்ரல் - மே மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு 77 சதவீதம் அதிகரித்து 779 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், இது 439 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.இத்தகைய போக்கு காரணமாக, நடப்பு நிதியாண்டில்,மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய நிதியமைச்சகம், வரி வசூலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆன்-லைன் மூலம் எளிமையாக வரி செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செ#வோரின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்துவருகிறது.எனினும் சென்ற நிதியாண்டில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாக, வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 3 சதவீதத்திற்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|