பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
10:24
ராமநாதபுரம் : எதிர்பார்த்த மீன்பாடு இல்லாததால், ஏற்றுமதி பாதியாக குறைந்துள்ளது. இதனால், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் திணறி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பிடிக்கப்படும் இறால், கணவாய், நண்டு ஆகியவை அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராமேஸ்வரம் பகுதி இறால்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இவை, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் செல்லும். தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், குறைவான காற்றே வீசுவதால், கடல் அலையின்றி காணப்படுகிறது. இதனால் இறால் மீன்கள் மேல்மட்டத்துக்கு வராமல், கடல் அடியிலேயே இருக்கின்றன. சீலா, ஊழா, நகரை, பண்ணான், கெளுத்தி போன்ற மீன்கள் கடல்நீருடன், நன்னீர் கலக்கும் நேரங்களில்தான் அதிகம் கிடைக்கும். இந்த மீன்கள் உள்ளூர் மார்க்கெட்டிலேயே அதிக விலை போவதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. மீன் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது: இறால்களுக்கு, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. விலை அதிகரித்தும், கடந்த 10 ஆண்டில் இந்த ஆண்டுதான் மீன்பாடு குறைவாக உள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு, மத்திய அரசால் மீன் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. 10 டன் ஏற்றுமதியான நிலையில், இந்தாண்டு, இதில் பாதி கூட ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|