மூன்றாண்டுகளில் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதிமூன்றாண்டுகளில் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதி ... ஆக்சிஸ் வங்கி நிகரலாபம் 27% உயர்வு ஆக்சிஸ் வங்கி நிகரலாபம் 27% உயர்வு ...
குறைந்தது மீன் ஏற்றுமதி: கம்பெனிகள் திணறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
10:24

ராமநாதபுரம் : எதிர்பார்த்த மீன்பாடு இல்லாததால், ஏற்றுமதி பாதியாக குறைந்துள்ளது. இதனால், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் திணறி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பிடிக்கப்படும் இறால், கணவாய், நண்டு ஆகியவை அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராமேஸ்வரம் பகுதி இறால்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இவை, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் செல்லும். தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், குறைவான காற்றே வீசுவதால், கடல் அலையின்றி காணப்படுகிறது. இதனால் இறால் மீன்கள் மேல்மட்டத்துக்கு வராமல், கடல் அடியிலேயே இருக்கின்றன. சீலா, ஊழா, நகரை, பண்ணான், கெளுத்தி போன்ற மீன்கள் கடல்நீருடன், நன்னீர் கலக்கும் நேரங்களில்தான் அதிகம் கிடைக்கும். இந்த மீன்கள் உள்ளூர் மார்க்கெட்டிலேயே அதிக விலை போவதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. மீன் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது: இறால்களுக்கு, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. விலை அதிகரித்தும், கடந்த 10 ஆண்டில் இந்த ஆண்டுதான் மீன்பாடு குறைவாக உள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு, மத்திய அரசால் மீன் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. 10 டன் ஏற்றுமதியான நிலையில், இந்தாண்டு, இதில் பாதி கூட ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)