பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
14:45
சென்னை: ஒரு காலத்தில் கார் பிரியர்களின் பேவரைட்டாகவும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனமாகவும் இருந்து கோலோச்சிய அம்பாசிடர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்களின் படையெடுப்பால் மெல்ல மெல்ல தனது பெருமையை இழந்தது. இந்நிலையில், மீண்டும் அம்பாசிடர் காரை பிரபலப்படுத்தவும், புதிய அம்பாசிடர் கார் வகைகளை அறிமுகப்படுத்தி இழந்த மார்கெட்டைப் பிடிக்கவும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதல்கட்டமாக, அசாம், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஹிந்துஸ்தான் நிறுவனம் அம்பாசிடர் கார் ரோடு ஷோக்களை நடத்தியது. தொடர்நது, 2ம் கட்டமாக தமிழகத்தில் இந்நிறுவன ரோடு ஷோ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் அய்யப்பன் கோயில் முன்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் ஜா, ரோடு ஷோவை துவக்கி வைத்தார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட அம்பாசிடர் கிராண்ட், எச்.எம். வின்னர் 1.5 எக்ஸ் டி பிளஸ் டிரக் உள்ளிட்டவை இந்த ஷோவில் கலந்து கொண்டன. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, திருச்சி, கோவை, நாகர் கோவில், நெல்லை வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த ரோடு ஷோ நடக்கவுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|