பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
02:38
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில்பாமாயில் விலை டின்னுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில்,பருப்பு மூடைக்கு 400, மிளகாய் வத்தல் டன்னுக்கு 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 2805ரூபாயாக உள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1530, சூரிய காந்தி எண்ணெய் 1200 ரூபாயாக உள்ளது. பாமாயில் 920 லிருந்து 935 ரூபாயாக உயர்ந்துள்ளது. நிலக்கடலைப் பருப்பு 4500, கடலைப் புண்ணாக்குமூடை 3000 ஆக உள் ளது.உளுந்து விலை மூடைக்கு 5000 லிருந்து 4700,சுமார் ரக உளுந்து 4000 லிருந்து 3700 ,பர்மா பருவட்டு உளுந்து 4900 லிருந்து 4200 ரூபாயாக குறைந்துள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6500 லிருந்து 6400, பர்மா பருவட்டு பருப்பு 6000 லிருந்து 5600 ரூபாயாக குறைந்துள்ளது. துவரை 3900, பொடி துவரை 3100 ரூபாயாக உள்ளது.துவரம் பருப்பு 5700,பொடி துவரம்பருப்பு 4000லிருந்து 3600ரூபாயாக குறைந்துள்ளது.பாசிப்பயறு 5600, லயன் பருவட்டு 3900,சுமார் ரகம் 3200 ரூபாயாக உள்ளது.பாசிப்பருப்பு 5200, சுமார் ரகம் 4800 ரூபாயாக உள்ளது.மைதா2220,கொண்டைக்கடலை3000,பொரிகடலை 2280 ரூபாயாக உள்ளது.மிளகாய் புதுவத்தல் 8000ருந்து 7500, சுமார் ரகம்7000 லிருந்து 6800 ரூபாயாக குறைந்துள்ளது. சோடை வத்தல் 3000 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2200 ரூபாயாக உள்ளது.' மார்க்கெட்டில் எண்ணெய் வரத்து இல்லாததால் பாமாயில் விலை உயர்ந்துள்ளதா கவும், மார்க்கெட்டில் பருப்பு விற்பனை அதிகம் இல்லாததால் அதன் விலையும் குறைந்து வருவதாக,' வியாபாரி கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|