பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
02:48
சென்னை:சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, மின்காந்த அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.ஒரு காஸ் சிலிண்டரின் விலை, 410 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால், தாய்மார்கள் கவலையில் உள்ளனர். இந்த கவலையை போக்க மின்காந்த அடுப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. சேலம், முள்ளுவாடி கேட், நான்கு ரோடு, ஐந்து ரோடு, கடை வீதி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உட்பட பல இடங்களில் மின்காந்த அடுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. மின்காந்த அடுப்புகள், 1,500 முதல், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடாக இருப்பதால், மின்காந்த அடுப்புகளை பயன்படுத்த தற்போது மக்கள் முன்வரத் துவங்கியுள்ளனர்.மின் காந்த அடுப்பு விற்பனையாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:காஸ் சிலிண்டர் தட்டுப்பாடாக இருப்பதால், மின்காந்த அடுப்புகளை பயமின்றி பயன்படுத்தலாம். மின்சாரம் தாக்கி விடுமோ என, பலர் அச்சப்படுகின்றனர். இது தவறு. எந்த விதத்திலும் மின்சாரம் தாக்காது. எவர்சில்வர் பாத்திரங்களை மட்டுமே மின்காந்த அடுப்புகளில் பயன்படுத்த முடியும்.அலுமினியம் உட்பட மற்ற பாத்திரங்களில் சூடேறாது. 200 வாட்ஸ் முதல், 2,000 வாட்ஸ் வரை பயன்படுத்த முடியும். இதனால், சமை யல் செய்வது சுலபமாகிறது.ஒரு மணி நேரம் பயன்படுத்தினால், ஒரு யூனிட் மட்டுமே மின்சாரம் செலவாகும். மின்காந்த அடுப்பில், பாத்திரங்களை வைக்கும் போது மட்டுமே சூடேறும். பால் பொங்கியோ, தண்ணீர் சிந்தியோ மின்காந்த அடுப்பில் விழுந்தால், மின்சாரம் தாக்காது. அதேபோல், சமையல் செய்யப்படும் பாத்திரங்களும் சூடேறாது. சமையல் செய்யப்படும் பாத்திரங்களில், பொருள்களை வைத்து விட்ட பிறகு தான், 'சுவிட்ச் ஆன்' செய்ய வேண்டும். காலியான பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கக்கூடாது என்பதே முக்கியம். 2,000 வாட்சில் பாத்திரத்தை சூடுபடுத் தினால், 10 நிமிடத்தில் குக்கரில் உள்ள அரிசி சாதமாகிவிடும். காஸ் அடுப்பில் சாதம் செய்வதை விட, மின்காந்த அடுப் பில் செய்வது சுலபம்; வேகமாகவும் ஆகிவிடும். எனவே, அவசர உலகத்துக்கு கட்டாயம் மின்காந்த அடுப்பு தேவைப் படுகி றது.மேக்பவர், மிட்சன், பட்டர்பிளை உட்பட பல்வேறு இந்திய நிறுவனங்கள், சீன நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற்றை இங்கு விற்பனை செய்து வருகின்றன.ஐ.எஸ்.ஓ., ஐ.எஸ்.ஐ., தரத்துடன் மின்காந்த அடுப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவன மின்காந்த அடுப்புகளை வாங்கும் போது, எவர்சில்வர் குக்கர், எவர்சில்வர் பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|