பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
03:18
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று, நன்கு இருந்தது.பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறப்பான செயல்பாட்டை கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல்பாடு நன்கு இருக்கும் என்ற அடிப்படையில், காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.சென்ற வெள்ளிக்கிழமையன்று, கடன் உச்சவரம்பு பிரச்னை காரணமாக அமெரிக்க பங்கு சந்தைகளில் வர்த்தகம், சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கத்தால், திங்கள்கிழமையன்று இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம், மந்தமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளில், காலையில் வர்த்தகம் தொடங்கியபோதும் எதிரொலித்தது. மேலும், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் என்றளவில், மீண்டும் உயர்த் தக்கூடும் என்ற ஐயப்பாடும், பங்குச் சந்தையில் நிலவியது.இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, ஒரு சில நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடு, நன்கு இருந்ததையடுத்து, உலோகம், மருந்து, மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 148.99 புள்ளிகள் அதிகரித்து, 18,871.29 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,932.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,670.84 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 46.35 புள்ளிகள் உயர்ந்து, 5,680.30 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,700.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,616.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|