பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
03:26
மும்பை:முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ - ரசாயனம், எண்ணெய், எரிவாயு உற்பத்தி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், இந்தியாவில் இந்நிறுவனமே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.இந்நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 5,661 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4,851 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண் டுகளில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 58 ஆயிரத்து 228 கோடி ரூபாயிலிருந்து, 81 ஆயிரத்து 018 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இதர வருவாய், அதிகரித்துள்ளதையடுத்து, விற்றுமுதல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்முகேஷ் அம்பானிகூறுகையில், 'நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாபவரம்பு, அதிகரித்துள்ளதையடுத்தும், பெட்ரோ - ரசாயன வர்த்தகம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதையடுத்தும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயும், லாபமும் அதிகரித்துள்ளது' என்றார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாடு, சந்தை ஆய்வாளர்களின் மதிப்பீட்டை ஒட்டியே இருந்தது. நிறுவனத்தின் சிறந்த செயல்பாடு காரணமாக, திங்கள்கிழமையன்று, இதன் பங்கின் விலை, வர்த்தகம் முடியும் போது, 0.98 சதவீதம் அல்லது 8.55 ரூபாய் அதிகரித்து, 882.15 ரூபாயில் கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 892.95 ரூபாய் வரையிலும், குறைந்தபட்சமாக, 880 ரூபாய் வரையிலும் சென்றது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 5,636.82 கோடி ரூபாயாக இருக்கும் என, ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்திருந் தனர். ஆனால், நிறுவனத்தின் நிகரலாபம், மதிப்பீட்டை விட சற்று குறைந்துள்ளது என்றாலும், நிறுவனத்தின் விற்று முதல், ஆய்வாளர்களின் மதிப்பீட்டு அளவான, 76,829.30 கோடி ரூபாயை விட, அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|