பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
16:19
மும்பை: ஐ.பி.எல்., போன்று ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த வேர்ல்டு சீரிஸ் ஹாக்கிப்போட்டிகள் நடக்கவுள்ளன. வரும் டிசம்பர் மாதம் 15ம்தேதி முதல் ஜனவரி 22 வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன. இப்போட்டிகளை நிம்பஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏற்று நடத்துகிறது. மொத்தம் 8 அணிகள் மோதும் இப்போட்டிகளுக்காக இதுவரை 176 உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹாக்கி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சாரதா சிங், அட்ரியன் டிசோசா, அர்ஜூன் ஹாலப்பா, பிரபோத் சிங் ஆகியோர் சில அணிகளுக்கு கேப்டனாக இருப்பார்கள். இதே போல், வெளிநாட்டு வீரர்களான ஆஸி.,யைச் சேர்ந்த பிரண்ட் லிவர், பாகிஸ்தானின் ரெஹன்பட், முன்னாள் ஸ்பெயின் வீரர் ரோட்ரிகோ கார்சா மற்றும் அர்ஜென்டினாவின் லூகாஸ் வில்லா ஆகியோர் சில அணிகளுக்கு கேப்டனாக இருப்பார்கள். இப்போட்டிகளின் மூலம் சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டிகளின் ஒளிபரப்பிற்காக ஈ.எஸ்.பி.என்., சோனி மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் போட்டியிடுவதாகவும், இதன் மூலம் ரூ. 100 கோடி வரை வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் நிம்பஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|