இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.407 கோடியாக அதிகரிப்புஇந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.407 கோடியாக அதிகரிப்பு ... பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் ...
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மொத்த வருவாய் ரூ.4,332 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2011
00:04

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பீ), சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 4,331.77 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 2,882.38 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 463.90 கோடியிலிருந்து, 802.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.நரேந்திரா தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, வழங்கப்படும் கடன்கள் மற்றும் இதர ஒதுக்கீடுகளுக்காக, 544.95 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 205.58 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 200.44 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய், 2,667.52 கோடியிலிருந்து, 3,992.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வட்டி அல்லாத இதர இனங்கள் வாயிலான வருவாய், 214.86 கோடியிலிருந்து, 339.19 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வட்டி செலவினம், 1,761.26 கோடியிலிருந்து, 2,804.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து நிகர வட்டி வருவாய், 906.26 கோடியிலிருந்து, 1,187.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஜூன் மாதம் 30 ம் தேதி வரையிலும், வங்கியின் மொத்த வர்த்தகம், 40.49 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 92 ஆயிரத்து 412 கோடியிலிருந்து, 2 லட்சத்து 70 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், திரட்டப்பட்ட டிபாசிட் 38.11 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 9 ஆயிரத்து 461 கோடியிலிருந்து, 1 லட்சத்து 51 ஆயிரத்து 173 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள், 43.64 சதவீதம் அதிகரித்து, 82 ஆயிரத்து 951 கோடியிலிருந்து, 1 லட்சத்து 19 ஆயிரத்து 148 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நரேந்திரா மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)