பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
00:05
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும், மந்தமாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் தொடர்ந்து சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதே சமயம், வங்கி, நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 12.32 புள்ளிகள் குறைந்து, 18,197.20 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,334.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,131.86 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. மேலும், இப்பங்குச் சந்தையில், 1,130 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,753 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 107 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் எதுவுமின்றி இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 5.75 புள்ளிகள் சரிந்து, 5,482 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,520.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,453.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|