பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:08
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த, 22ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 229 கோடி டாலர் (10 ஆயிரத்து, 534 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து, 680 கோடி டாலராக (14 லட்சத்து, 57 ஆயிரத்து,280 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 11 கோடியே, 20 லட்சம் டாலர் (515 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து, 450 கோடி டாலராக (14 லட்சத்து, 46 ஆயிரத்து, 700 கோடி ரூபாய்) சரிவடைந்து காணப்பட்டது.மதிப்பீட்டு வாரத்தில்,கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 222 கோடியே70 லட்சம் டாலர் (10 ஆயிரத்து, 244 கோடி ரூபாய்) உயர்ந்து, 28 ஆயிரத்து, 453 கோடி டாலராக (13 லட்சத்து,8,820 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 2.6 கோடி டாலர் (120 கோடி ரூபாய்) அதிகரித்து, 298 கோடியே, 20 லட்சம் டாலராக (13 ஆயிரத்து, 717 கோடியே, 20 லட்ச ரூபாய்) உள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர் மதிப்பு, 4 கோடியே, 10 லட்சம் டாலர் (188 கோடியே, 60 லட்ச ரூபாய்) உயர்ந்து, 462 கோடியே, 50 லட்சம் டாலராக (21 ஆயிரத்து, 275 கோடி ரூபாய்) உள்ளது.கடந்த வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை யடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|