பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:09
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 1,332 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 29.8 சதவீதம் (1,026 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய் 23.6 சதவீதம் அதிகரித்து, 7,493 கோடியிலிருந்து, 9,261 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய், 21.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,991 கோடியிலிருந்து, 2,411 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம், 2.1 சதவீதம் உயர்ந்து, 2,188 கோடியிலிருந்து, 2,234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள், 1.84 லட்சம் கோடியிலிருந்து, 2.20 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|