ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் நிகர லாபம் ரூ.1,332 கோடிஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் நிகர லாபம் ரூ.1,332 கோடி ... ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம் சர்வதேச  சந்தையில் டாலர் மதிப்பு  சரிவு ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம் சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு ... ...
உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில் பெருக வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2011
03:09

சென்னை:''பழங்கள், காய்கறிகள் அழுகி வீணாவதை தடுக்க, உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழில்கள் துவங்குவதற்கு தொழில் முனைவோர் அதிகம் பேர் முன் வரவேண்டும்,'' என்று ஆச்சி மசாலா குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) சார்பில், விவசாய உணவு பொருள்கள் மேம்பாடு குறித்த மாநாடு (புட் கான்-2011) சென்னையில் நடந்தது. இம்மாநாட்டை துவக்கி வைத்து, ஆச்சி மசாலா குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் பேசியதாவது:விவசாய உற்பத்தி மூலம் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் முறையான வகையில் சந்தைப் படுத்தப்படாததால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதுபோன்ற சமயங்களில், விவசாய உணவு பொருள்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு, அதன் மூலம் இப்பொருள்களுக்கு மதிப்பூட்டுவதற்கு, புதிய தொழில் நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.பழங்கள், காய்கறிகள் குறைந்த நாட்களில் அழுகி வீணாகிவிடுகின்றன. இதனை தடுத்து விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கு உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அதிகம் துவங்கப்பட வேண்டும். தொழில் முனைவோர்கள், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, விவசாய உணவு பொருள்களை பதப்படுத்தும் தொழில் செய்வதற்கு முன் வரவேண்டும்இவ்வாறு பத்மசிங் ஐசக் பேசினார்.மாநாட்டில் 'டாபே' நிறுவனத்தின் நிதிநிலை முதன்மை அதிகாரி சந்திரமோகன் பேசும் போது,''பழங்கள், காய்கறிகள் மற்றும் விவசாய உற்பத்தி மூலம் கிடைக்கும் பொருள்களில் செய்யப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடாமலிருக்க, சந்தைப்படுத்த ஏதுவாக குளிர்சாதன வசதியுடன் நடமாடும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். பொருளாதார மேம்பாடு மற்றும் மாறுதலான வாழ்க்கை முறையால் இந்தியா மற்றும் உலகச் சந்தையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையை சரியான நேரத்தில், முறையான வழிகளில் பயன்படுத்திக்கொண் டால் லாபம் அதிகம் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள் கெட்டுவிடாமல் பதப்படுத்தி, சந்தைப்படுத்த ஏதுவாக தனியார் மற்றும் மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் உணவு பூங்காக்கள் துவங்கப்படவேண்டும்,'' என்றார்.மாநாட்டில், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கரா” பேசும் போது,''இந்தியாவில் உணவு பொருள்கள் பதப்படுத்தும் தொழிலுக்கு வெளிநாட்டு முதலீடுகள் எளிதாக கிடைக்கும் நிலை உள்ளது. இதனை முறையாக, உரிய வழிகளில் பயன்படுத்திக் கொண்டால், விவசாய பொருள்களுக்கு உலகச் சந்தைகளில் நல்ல விலை கிடைக்கும். அழுகி வீணாவதும் தவிர்க்கப்படும். இத்தொழிலில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாவதன் மூலம், கிராமப்புற மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நகரம் மற்றும் கிராமப்புற வேறுபாடுகளை குறைக்க உணவுப் பதப்படுத்தும் தொழில் பாலமாக அமையும்,'' என்றார்.மாநாட்டில், சி.ஐ.ஐ.,யின் இயக்குனர் மொய்னுதீன் உட்பட, 700க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)