பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:09
சென்னை:''பழங்கள், காய்கறிகள் அழுகி வீணாவதை தடுக்க, உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழில்கள் துவங்குவதற்கு தொழில் முனைவோர் அதிகம் பேர் முன் வரவேண்டும்,'' என்று ஆச்சி மசாலா குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) சார்பில், விவசாய உணவு பொருள்கள் மேம்பாடு குறித்த மாநாடு (புட் கான்-2011) சென்னையில் நடந்தது. இம்மாநாட்டை துவக்கி வைத்து, ஆச்சி மசாலா குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் பேசியதாவது:விவசாய உற்பத்தி மூலம் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் முறையான வகையில் சந்தைப் படுத்தப்படாததால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதுபோன்ற சமயங்களில், விவசாய உணவு பொருள்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு, அதன் மூலம் இப்பொருள்களுக்கு மதிப்பூட்டுவதற்கு, புதிய தொழில் நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.பழங்கள், காய்கறிகள் குறைந்த நாட்களில் அழுகி வீணாகிவிடுகின்றன. இதனை தடுத்து விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கு உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அதிகம் துவங்கப்பட வேண்டும். தொழில் முனைவோர்கள், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, விவசாய உணவு பொருள்களை பதப்படுத்தும் தொழில் செய்வதற்கு முன் வரவேண்டும்இவ்வாறு பத்மசிங் ஐசக் பேசினார்.மாநாட்டில் 'டாபே' நிறுவனத்தின் நிதிநிலை முதன்மை அதிகாரி சந்திரமோகன் பேசும் போது,''பழங்கள், காய்கறிகள் மற்றும் விவசாய உற்பத்தி மூலம் கிடைக்கும் பொருள்களில் செய்யப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடாமலிருக்க, சந்தைப்படுத்த ஏதுவாக குளிர்சாதன வசதியுடன் நடமாடும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். பொருளாதார மேம்பாடு மற்றும் மாறுதலான வாழ்க்கை முறையால் இந்தியா மற்றும் உலகச் சந்தையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையை சரியான நேரத்தில், முறையான வழிகளில் பயன்படுத்திக்கொண் டால் லாபம் அதிகம் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள் கெட்டுவிடாமல் பதப்படுத்தி, சந்தைப்படுத்த ஏதுவாக தனியார் மற்றும் மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் உணவு பூங்காக்கள் துவங்கப்படவேண்டும்,'' என்றார்.மாநாட்டில், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கரா” பேசும் போது,''இந்தியாவில் உணவு பொருள்கள் பதப்படுத்தும் தொழிலுக்கு வெளிநாட்டு முதலீடுகள் எளிதாக கிடைக்கும் நிலை உள்ளது. இதனை முறையாக, உரிய வழிகளில் பயன்படுத்திக் கொண்டால், விவசாய பொருள்களுக்கு உலகச் சந்தைகளில் நல்ல விலை கிடைக்கும். அழுகி வீணாவதும் தவிர்க்கப்படும். இத்தொழிலில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாவதன் மூலம், கிராமப்புற மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நகரம் மற்றும் கிராமப்புற வேறுபாடுகளை குறைக்க உணவுப் பதப்படுத்தும் தொழில் பாலமாக அமையும்,'' என்றார்.மாநாட்டில், சி.ஐ.ஐ.,யின் இயக்குனர் மொய்னுதீன் உட்பட, 700க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|