பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:10
மும்பை:அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு பிரச்னை காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, டால ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.அமெரிக்க அரசு, அதன் கடன் உச்சவரம்பை அதி கரித்துக் கொள்ள, இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இப்பிரச்னை தொடர்பாக ஒபாமா அரசுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே, ஒருமித்த உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. அமெரிக்கா, ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணாவிட்டால்,அந்நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச்சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா,சீனா,ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பு,கடந்த ஒரு வார காலமாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில், இந்தியாவின் பணவீக்கத்தைகட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, அண்மையில் வங்கிகளுக்கான 'ரெப்போ ரேட்' விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த் தியது. இதையடுத்து,ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு குறைந்த கால அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம், 7.50 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், வங்கிகள், குறைந்த கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியி டமிருந்து பெறும் கடனுக்கான 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 6.50 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந் தாண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 11 முறை உயர்த்தி யுள்ளது.இதனால், இந்தியாவில், கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.இந்தசாதகமான சூழல், நெருக்கடியில் சிக்கி யுள்ள அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைச் ÷Œர்ந்த முதலீட்டாளர்களுக்கு, மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி, 3சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால்,வட்டி விகிதம் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில், அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் முதலீடு öŒய்யத் தொடங்கியுள் ளனர்.இதனால்,சர்வதேŒ அளவில் டாலர் புழக்கம் அதிகரித்து, அதன் மதிப்பு குறைந்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிகவும் உயர்ந்துள்ளது. öŒன்ற வியாழனன்று டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 44.07 ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது. எனினும், வெள்ளியன்று, டால ருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 11 கா”கள் குறைந்து 44.18 ரூபாய் என்ற அளவில் நிலை கொண்டது. முந்தைய மூன்று வர்த்தக தினங்களில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 33 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதே போன்று அமெரிக்க டாலருக்கு எதிரான கனடா டாலர், ஆஸ்திரேலிய டாலர், சுவிட்சர்லாந்து பிராங்க், ஜப்பான் யென் உள்ளிட்ட கரன்சிகளின் மதிப்பும் புதிய உச்Œத்தைக் கண்டுள்ளன.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 51.97 என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.அதாவது, 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு இறக்குமதியாளர் 1,000 டாலர் மதிப்பிற்கான ஒரு பொருளை இறக்குமதி செய்திருந்தால், அவர் 51 ஆயிரத்து 970 ரூபாயை செலவிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று டாலரின் மதிப்பு 44 ரூபாயாக சரிவடைந்துள்ள நிலையில், அதே இறக்குமதியாளர், 44 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும்.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது இறக்குமதியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால், ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தும். இதற்கு எடுத்துக்காட்டாக, 2009ம் ஆண்டில், 1,000 டாலர் மதிப்பிற்கான பொருளை ஏற்றுமதி செய்திருந்தால், அவ ருக்கு 51 ஆயிரத்து 970 ரூபாய் கிடைத்திருக்கும்.ஆனால், இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள் ள தால், ஏற்றுமதியாளருக்கு 44 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். ஆக, ஏற்றுமதியாளருக்கு ரூபாய் மதிப்பு உயர்வால் மட்டும், 7,970 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.கடந்த 2008ம் ஆண்டில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியால், உலகப் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அப்போது, இந்திய ஏற்றுமதியாளர் களுக்கு, அதிக இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பல ஏற்றுமதியாளர்கள், முன்பேர ஒப்பந்தத்தின் மூலம், ஏற்றுமதி மேற்கொள்ள தலைப்பட்டனர்.இதன்படி, குறிப்பிட்ட ஓராண்டில், அமெரிக்க டாலரின் மதிப்பில் எப் படிப்பட்ட ஏற்ற, இறக்கம் இருந்தாலும், குறிப்பிட்ட மதிப்பில் ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில், ஏற்றுமதியாளர் கள், அயல் நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.அமெரிக்காவில் நிலவும் அŒõதாரணமான ‹ழலால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடும், பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, அன்னிய முதலீடுகள் இந்தியாவிற்கு, அதிகளவில் வரும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செலவழிப்பு குறைந்தது:அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், எதிர்பார்த்த அளவை விட, 0.5சதவீதம் குறைந்து, 1.3சதவீதம் என்ற அளவிற்கே உள்ளதாக, அந்நாட்டு அர” தெரிவித்துள்ளது. மேலும், முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி, 1.9சதவீதத்தில் இருந்து, 0.4சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களிலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, மந்த கதியில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், நான்காம் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு, 3.1சதவீதத்தில் இருந்து 2.3சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வு, சுனாமி பாதிப்பால் ஜப்பான் நாட்டின் வாகனம் மற்றும் உதிரிபாகங்கள்சப்ளை குறைந்து போனது, வேலையில்லாத் திண் டாட் டம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், அமெரிக்க பொருளாதாரம்சுணக்கம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக, அமெரிக் கர்கள் செலவழிப்பதும் குறைந்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கை யில், நுகர்வோரின் öŒலவழிப்பு, 70சதவீதமாக இருந்தது. இது, தற்போது, 0.1சதவீதம் என்ற அளவிற்கு, வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு, பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இந்த அளவிற்கு தற்போது தான், நுகர்வோர் öŒலவழிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, இவ்வாண்டு இறுதிவரை மந்தமாகவே இருக்கும் என்று ,பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|