பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
11:11
புதுடில்லி : சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கென தனியான பங்குச் சந்தை அமைக்க உள்ளதாக மும்பை பங்குச் சந்தை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர (எஸ்.எம்.இ.,) நிறுவனங்களுக்கான பங்குச் சந்தை செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.இ., யின் சி.இ.ஓ., சமீபத்தில் தன்னை சந்தித்து இத்தகவலை தெரிவித்ததாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சக செயலாளர் உதய்குமார் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.எம்.இ., அமைப்பதற்கான பணிகளை பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ., ஆகிய இரண்டும் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய பங்குச் சந்தை அமைப்பதற்கு தேசிய பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் (செபி) ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|