பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
12:37
சென்னை : பானாசோனிக் இந்தியா நிறுவனம், பானாசோனிக் டெக்னோ பார்க் என்னும் பெயரில் தனது உற்பத்தி ஆலையை ஹரியானாவில் துவங்க உள்ளது. இந்த புதிய ஆலை 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலையில் வாஷிங்மிஷின், ஏசி, வெல்டிங் சாதனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி ஆலை அமைக்க 200 மில்லியன் டாலர்களை பானாசோனிக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. புதிய ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி உள்ளன. இப்பணிகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பானாசோனிக் இந்தியா நிறுவன தலைவர் டைஜோ இடு தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சுமார் 3500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|