பதிவு செய்த நாள்
02 ஆக2011
02:28
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின் கடன் பிரச்னைக்குத் தீர்வு அளிக்கும் வகையில், கடனுக்கான உச்சவரம்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளின் பங்கு வியாபாரம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. திங்கள் கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கான தேவை குறைவாக இருந்தது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 117.13 புள்ளிகள் அதிகரித்து, 18,314.33 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,440.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,219.25 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 34.80 புள்ளிகள் உயர்ந்து, 5,516.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,551.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,486.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|