பதிவு செய்த நாள்
02 ஆக2011
02:39
புதுடில்லி:நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2சதவீத அளவிற்கே இருக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.5சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 8சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியும், 8.5 சதவீதமாக இருக்கும் என மத்தியஅரசும், மதிப்பீடு செய்திருந்தன. இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, இந்த இரண்டுக்கும் மத்தியில், பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :சர்வதேச பொருளாதார நெருக்கடியின்காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மந்தமாகவே இருக்கும். அதேசமயம், வரும் அக்டோபர் மாதம் வரை, நாட்டின் பணவீக்கம், 9சதவீதம் என்ற அளவிலும், அதன் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 6.5சதவீதமாக குறையும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அர”, அதன் தொகுப்பில் உள்ள உணவுப் பொருள்களை, தாராளமாக வினியோகிக்கவேண்டும். வரிகள் வாயிலான வருவாயை பெருக்குவது டன், வரி பாக்கி வைத்துள்ளோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவேண்டும்.தவிர்க்கக் கூடிய செலவினங் களைக் குறைத்து,சரக்கு மற்றும்சேவை வரியை அமல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளுக்கு, மாநில அரசுகளுடன் இணைந்து,சுமூக தீர்வுக் காணவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|