நடப்பு 2011 - 12 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2சதவீதமாக இருக்கும்நடப்பு 2011 - 12 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2சதவீதமாக இருக்கும் ... நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு:கார் விற்பனையில் சரிவு நிலை நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை ... ...
மொபைல்போன் பயன்பாடு 120கோடியை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
02:41

புதுடில்லி:மொபைல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, வரும் 2014ம் ஆண்டில், நாட்டின் மொத்த மக்கள் தொகை அளவிற்கு, அதாவது, 120கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 21 தொலைத் தொடர்பு வட்டங்களில், மக்கள் தொகைக்கு நிகரான மொபைல்போன் பயன்பாடு, 150சதவீதம் என்ற அளவிற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த 21 வட்டங்களில் உள்ள மக்கள் தொகையை விட, 50சதவீதம் கூடுதலாக மொபைல்போன் பயன்பாடு உள்ளது.இதுபோன்று, ஒரு வட்டத்தில் மக்கள் தொகையை விட மொபைல்போன் பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில், இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மை மக்கள் கிராமப்புறத்தில் வசிக்கும் இம்மாநிலத்தில், மொபைல்போன் பயன்பாடு, 430.5சதவீத அளவிற்கு உள்ளது என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளா 224சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், டில்லி 210சத வீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அடுத்த இடங்களில் ஒடிசா (190சதவீதம்), ஆந்திரா (173சதவீதம்), பஞ்சாப் (162சதவீதம்) ஆகியவை உள்ளன. தமிழ்நாட்டில், மொத்த மக்கள் தொகை அடிப்படையிலான மொபைல்போன் பயன்பாடு 145சதவீதமாக உள்ளது.அதேசமயம், இந்திய கிராமப்புறங்களில் மொபைல்போன் பயன் பாடு, 32.75சதவீதமாக உள்ளது. சென்ற மார்ச் நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில், மொபைல்போன் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 67.98சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதிலும், இமாச்சலப் பிரதேசம் 66சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில், மொபைல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 44.76சதவீதமாக உள்ளது. இது, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 50சதவீதத் திற்கும் அதிகமாகவும், தமிழ்நாடு,கேரளா மற்றும் குஜராத்தில் 40சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது.வரும் 2014ம் ஆண்டில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கையிலும் மொபைல்போன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், இனி இந்தியாவில் மொபைல்போன் சேவைத் துறையில் நீண்ட கால வளர்ச்சியோ, மேம்பாடோ இருக்க வாய்ப் பில்லை.அதனால், மொபைல்போன் நிறுவனங்கள், 3ஜிபோன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கி வருவாயை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதற்குசான்றாக, சென்ற பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 5 மாத காலத்தில், புதிய மொபைல்போன்சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 40சதவீதம் குறைந்து, 1.47கோடியில் இருந்து, 86 லட்சமாகசரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)