ஜெனரல் மோட்டார்ஸ் 'செவர்லெ பீட்' டீசல் கார் அறிமுகம்ஜெனரல் மோட்டார்ஸ் 'செவர்லெ பீட்' டீசல் கார் அறிமுகம் ... வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சிறந்த சேவை வழங்க வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சிறந்த சேவை வழங்க வேண்டும் ...
அன்னிய பரஸ்பர நிதி திட்டங்களில் வருவாய் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:13

சென்னை: கடந்த ஓராண்டில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின், 11 அன்னிய பங்கு முதலீட்டு திட்டங்களின் மீதான வருவாய், 14.92 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனங்கள், உள்நாட்டில் மேற்கொண்ட, பங்கு சார்ந்த 160 திட்டங்களின் வருவாய், 2.29 சதவீத அளவிற்கே உயர்ந்துள்ளது.நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி நிறுவனங்கள், அயல் நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. உலகளவில், பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும், இந்த திட்டங்கள் மீதான வருவாய், கணிசமாக அதிகரித்துள்ளதாக, ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.சென்ற ஜூலை மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், 11 அன்னிய பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்து ஆய்வு @மற்கொள்ளப்பட்டது. அதில், பிடிலிட்டி கு@ளாபல் ரியல் அசெட்ஸ் பண்டு திட்டம், முதலீட்டாளர்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டில், 24.43 சதவீத வருவாயை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், லக்சம்பர்கைசேர்ந்த பிடிலிட்டி பரஸ்பர நிதி நிறுவனத்தின், கு@ளாபல் ரியல் அசெட் செக்யூரிட்டீஸ் பண்டு என்ற திட்டத்தில் முதலீடுமேற்கொள்ளப்பட்டுள்ளது.முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் வருவாய் வழங்கியதில், பிர்லா மியூச்”வல் பண்டு நிறுவனத்தின் சர்வதேச பரஸ்பர நிதி திட்டம் விளங்குகிறது. பிர்லா சன் லைøப் இண்டர்நேஷனல் ஈக்யுட்டி பிளான்-ஏ என்ற இத்திட்டத்தில், ஓராண்டில் 18.44 சதவீத வருவாய் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதி, சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும், பரஸ்பர நிதி திட்டங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.சென்ற ஜூன் மாதம் வரையில், இந்த 11 பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 1,042 கோடி ரூபாயாக உள்ளது.இந்நிறுவனங்களில், ஐ.என்.ஜி மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின், ஐ.என்.ஜி லத்தீன் அமெரிக்கா ஈக்யுட்டி பண்டு திட்டம் மட்டும் மிகக் குறைந்த அளவில், அதாவது 4.85 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. எனினும், உள்நாட்டில், 160 பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் வருவாயை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், உள்நாட்டை @சர்ந்த ஒ@ர ஒரு பரஸ்பர நிதி திட்டம் மட்டும், சர்வதேச பங்கு சார்ந்த முதலீடுகளுடன் ஒப்பிடும் @பாது, அதிக வருவாயை அளித்துள்ளது. எஸ்.பீ.ஐ மேக்னம் எஸ்.எப்.யு-எமெர்ஜிங் பிசினசஸ் பண்டு என்ற இத்திட்டத்தில், முதலீட்டாளர்களுக்கு, ஓராண்டில் 18.60 சதவீத வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)