உணவுப் பொருள் பணவீக்கம் 8.04 சதவீதமாக உயர்வுஉணவுப் பொருள் பணவீக்கம் 8.04 சதவீதமாக உயர்வு ... இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ...
'சென்செக்ஸ்' 247 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:15

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், @நற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இதையடுத்து, 'சென்செக்ஸ்' 47 புள்ளிகள் அதிகரித்திருந்தது. ஆனால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது.இந்நிலையில், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற செய்தியால், மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், நுகர்பொருள்கள், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், @நற்று, வர்த்தகம் முடியும் போது, 247.37 புள்ளிகள் சரிவடைந்து, 17,693.18 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 18,032.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,664.73 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ் இன்ப்ரா மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 73 புள்ளிகள் குறைந்து, 5,331.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,434.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,323.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)