பதிவு செய்த நாள்
05 ஆக2011
00:15
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், @நற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இதையடுத்து, 'சென்செக்ஸ்' 47 புள்ளிகள் அதிகரித்திருந்தது. ஆனால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது.இந்நிலையில், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற செய்தியால், மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், நுகர்பொருள்கள், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், @நற்று, வர்த்தகம் முடியும் போது, 247.37 புள்ளிகள் சரிவடைந்து, 17,693.18 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 18,032.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,664.73 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ் இன்ப்ரா மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 73 புள்ளிகள் குறைந்து, 5,331.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,434.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,323.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|