பதிவு செய்த நாள்
06 ஆக2011
00:13
மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்திய மின்சாதனங்கள் துறை, 16.60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 16.73 சதவீதமாக இருந்தது.இந்திய மின்சாரம் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஐ.ஈ.ஈ.எம்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் மின்சாரம் மற்றும் மின்ணணு சாதனங்களின் விற்பனை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2006-07ம் நிதியாண்டு முதல் 2010-11ம் நிதியாண்டு வரை, மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை, ஆண்டுக்கு 10.63 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2006-07ம் நிதியாண்டில், இத்துறையின் விற்பனை, 38ஆயிரத்து 920 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2007-08ம் நிதியாண்டில், 45ஆயிரத்து 370 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2008-09ம் நிதியாண்டில் விற்பனை வளர்ச்சி, 46 ஆயிரத்து 935 கோடி ரூபாயாகவும், இது, 2009-10ம் நிதியாண்டில், 51 ஆயிரத்து 730 கோடி ரூபாய் என்ற அளவிலும், வளர்ச்சி பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை, 58 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், மின் பகிர்மானக் கோபுரங்கள் மற்றும் கண்டக்டர்களின் விற்பனை, 9.1 சதவீதம் என்ற அளவில், எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், முதன் முறையாக இத்துறையின் விற்பனை வளர்ச்சி, சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், டிரான்ஸ்பார்மர் விற்பனை, 5.6 சதவீதமும், அதிக மின் அழுத்தத் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் விற்பனை, 8.1 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|