பதிவு செய்த நாள்
06 ஆக2011
00:17
புதுடில்லி: மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், தமிழகத்தில் சிறிய கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இங்கு, 2.50 முதல் 3.50 லட்ச ரூபாய் விலையுள்ள கார்கள் தயாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு வாகனங்களை தயாரித்து வரும் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், சிறிய கார் தயாரிப்பில் இறங்க உள்ளது. இதற்காக, தமிழ்நாடு, அரியானா ஆகிய மாநிலங்களை ஆய்வு செய்த இந்நிறுவனம், தமிழகத்தில் அதன் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தொழிற்சாலையில் முதற்கட்டமாக, 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. வரும் 2013 - 14ம் நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார் திட்டத்திற்கு, 'பீ.ஆர்.எல்' என்று பெயர் ‹ட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கார் உதிரிபாகங்கள் சப்ளை செய்வது தொடர்பாக, நான்கு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், ரெனால்ட் நிறுவனத்துடன் செய்து கெண்ட ஒப்பந்தம் முடிவிற்கு வந்த பின், அதன், 'மகிந்திரா லோகன்' கார் பெயரை, 'வெரிட்டோ' என மாற்றி சந்தைப்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், 'வெரிட்டோ' மற்றும் புதிய பெயரில் இரண்டு சிறிய கார்களை தயாரிக்க உள்ளது. டாட்டாவின், 'நானோ' கார் அறிமுகமானதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சிறிய கார் சந்தையில் களமிறங்கத் தயாராகி வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம், வரும் டிசம்பர் மாதம், அதன் சிறிய காரை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|