பதிவு செய்த நாள்
06 ஆக2011
00:17
குன்னூர்: நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தி, கடந்தாண்டு இதே காலத்தை விட 1.93 கோடி கிலோ அதிகரித்து 35.83 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. ஆக, தேயிலை உற்பத்தி 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே மாதங்களில், வட இந்தியாவில் தேயிலை உற்பத்தி 2.4 கோடி கிலோ அதிகரித்து, 21.23 கோடி கிலோவில் இருந்து, 23.62 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில், அசாம் மாநிலத்தின் கச்சார் பகுதி நீங்கலாக, அனைத்து பகுதிகளிலும் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.அதே சமயம், தென்னிந்தியாவில் தேயிலை உற்பத்தி 45.50 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.சென்ற ஜூன் மாதம், தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 1.06 கோடி கிலோ அதிகரித்து, 11.48 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, 10.26 சதவீதம் அதிகமாகும்.எனினும், நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் தேயிலை பற்றாக்குறை 12 கோடி கிலோ அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கென்யாவின் தேயிலை உற்பத்தி குறைந்து 3.70 கோடி கிலோ என்ற அளவிற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விலை உயர்ந்து வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், உள்நாட்டில் தேயிலை உற்பத்தி 96 கோடி கிலோவாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் உற்பத்தியை விட 3 கோடி கிலோ குறைவாகும். ஒட்டுமொத்தமாக, சென்ற ஆண்டில் தேயிலை பற்றாக்குறை 9 கோடி கிலோ என்ற அளவிற்கு இருந்தது.தேயிலை பயன்பாடு 3-3.5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 3 கோடி கிலோ தேயிலை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒட்டுமொத்த தேயிலை பற்றாக்குறை 12 கோடி கிலோவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|