பதிவு செய்த நாள்
06 ஆக2011
00:18
புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 13 சதவீதம் அதிகரித்து, 2.41 லட்சம் டன்னிலிருந்து, 2.72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவம்பர் - அக்டோபர்), ஜூலையுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், புண்ணாக்கு ஏற்றுமதி, 45.42 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த எண்ணெய் பருவத்தின், இதே காலத்தை விட, 85 சதவீதம் (24.58 லட்சம் டன்) உயர்வாகும்.எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், நடப்பு எண்ணெய் பருவத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருவதாக, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய புண்ணாக்கிற்கான தேவை, மிகவும் அதிகரித்து வருகிறது. 2010-11ல் பயிர் பருவத்தில் (ஜூலை- ஜூன்), நாட்டின் எண்ணெய் வித்துகள் உற்பத்தி, 31.10 லட்சம் டன்னாக மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.இந்தியாவிலிருந்து, ஜப்பான், சீனா, வியட்நாம், மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு, அதிகளவில் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|