பதிவு செய்த நாள்
06 ஆக2011
00:19
சென்னை: சென்ற 2010-11ம் நிதியாண்டில், சென்னை விமான நிலையம் வாயிலாக விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 14 சதவீதம் உயர்ந்து, 1.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1.05 கோடி என்ற அளவில் இருந்தது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்னையில் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை, 9 சதவீதம் அதிகரித்து, 1.31 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 45 லட்சம் பேர் உலக நாடுகளுக்கும், 86 லட்சம் பேர் உள்நாட்டிற்குள்ளும், விமானப் பயணம் மேற்கொள்வார்கள் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை, ஓரளவிற்கு மறையத் தொடங்கியதை அடுத்து, விமானப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, விமானப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் நிலையாக இருக்கும் என்று, கூற முடியாது. அதனால், மிதமான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடன், நடப்பு நிதியாண்டிற்கான விமானப் பயணிகள் எண்ணிக்கை, மதிப்பிடப்பட்டுள்ளது என்று, சென்னை, விமான நிலையங்கள் ஆணையத்தின் இயக்குனர் ஈ.பி.ஹரீந்திரநாதன் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளால், விமானப் பயணிகள் போக்குவரத்தில், எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்த அவர், இப்பணிகள் முடிவடைந்த பிறகு, வரும் 2012-13ம் நிதியாண்டில், வளர்ச்சி அதிகரிக்கும் என்று, மேலும் கூறினார்.கடந்த 2009-10ம் நிதியாண்டில், சென்னை விமான நிலையத்தில், விமானப் பயணிகளின் எண்ணிக்கை, முந்தைய நிதியாண்டை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்னை விமான நிலையத்தின் வருவாய், 644 கோடி ரூபாயில் இருந்து, 668 கோடி ரூபாயாக உயரும் என்று, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|