கடன் விகிதத்தை உயர்த்துகிறது யூனியன் பேங்க்கடன் விகிதத்தை உயர்த்துகிறது யூனியன் பேங்க் ... அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.14,67,400 கோடியாக அதிகரிப்பு அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.14,67,400 கோடியாக அதிகரிப்பு ...
கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.713 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:05

புதுடில்லி: நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 15.50 கோடி டாலராக (713 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 12 கோடி டாலராக (552 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, இதன் ஏற்றுமதி 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இந்திய கைவினைப் பொருள்களுக்கு, மேற்காசிய சந்தையில் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக, கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்திய கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. தற்போது, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்திய கைவினைப் பொருள்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது என கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி 20.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 71.10 கோடி டாலராக (3,271 கோடி ரூபாய்) உள்ளது. இதில், மரவேலைப்பாடுகள் நிறைந்த கைவினைப் பொருள்களின் பங்களிப்பு 52.8 சதவீதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, சால்வைகள் (49 சதவீதம்), கவரிங் நகைகள் (42 சதவீதம்) மற்றும் இதர கைவினைப் பொருள்கள் ( 32 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.சென்ற 2010-11ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, 230 கோடி டாலராக (10 ஆயிரத்து 580 கோடி ரூபாய்) இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி 270 கோடி டாலர் (12 ஆயிரத்து 420 கோடி ரூபாய்) அளவிற்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக மேம்பாட்டு கவுன்சில் மேலும் கூறியுள்ளது. மொராதாபாத், ஜெய்ப்பூர், ஷாகாரன்பூர், ஜோத்பூர் மற்றும் நர்சாபூர் ஆகியவை கைவினைப் பொருள்களின் முக்கிய உற்பத்தி மண்டலங்களாக விளங்குகின்றன. மேலும், இத்துறையின் வாயிலாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)