பதிவு செய்த நாள்
07 ஆக2011
00:05
மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூலை மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 229 கோடி டாலர் ( 10 ஆயிரத்து 534 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து 900 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 229 கோடி டாலர் (10 ஆயிரத்து, 534 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து, 680 கோடி டாலராக (14 லட்சத்து, 57 ஆயிரத்து, 280 கோடி ரூபாய்) இருந்தது. நாட்டின், அன்னியச் செலாவணி வரத்து தொடர்ந்து இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு,163 கோடியே 40 லட்சம் டாலர் (7,516 கோடியே 40 லட்சம் ரூபாய்) உயர்ந்து, 28 ஆயிரத்து, 616 கோடி டாலராக (13 லட்சத்து,16 ஆயிரத்து 336 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.மேலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 68 கோடியே 10 லட்சம் டாலர் அதிகரித்து, 2 ஆயிரத்து 535 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அதேசமயம், சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1 கோடி டாலர் ( 46 கோடி ரூபாய்)சரிவடைந்து, 297 கோடியே, 20 லட்சம் டாலராக (13 ஆயிரத்து, 671 @காடியே, 20 லட்சம் ரூபா#) குறைந்துள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர் மதிப்பும், 1 கோடியே, 60 லட்சம் டாலர் (73 கோடியே 60 லட்சம் ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 460 கோடியே, 90 லட்சம் டாலராக (21 ஆயிரத்து, 201@காடியே 40 லட்சம் ரூபா#) உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|