அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.14,67,400 கோடியாக அதிகரிப்புஅன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.14,67,400 கோடியாக அதிகரிப்பு ... பொது காப்பீட்டு பிரிமிய வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி பொது காப்பீட்டு பிரிமிய வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி ...
நடப்பு நதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில்உலகளவில் ரப்பர் உற்பத்தி 3.3 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:06

கொச்சி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், உலக நாடுகளின் இயற்கை ரப்பர் உற்பத்தி 3.3 சதவீதம் உயர்ந்திருக்கும் என்று, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பு, சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறித்த தற்காலிக மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உலக இயற்கை ரப்பர் உற்பத்தி 21.50 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இ@த காலத்தில், 20.90 லட்சம் டன்னாக இருந்தது. உலகளவில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 6.01 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது,@ம மாதம் 7.18 லட்சம் டன்னாகவும், ஜூன் மாதம் 2.35 லட்சம் டன் என்ற அளவிலும் இருக்கும் என்று தற்காலிக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மே , ஜூன் மாதங்களை விட, சென்ற ஏப்ரல் மாதத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தி 0.5 சதவீதம் குறைந்துள்ளது. அ@த சமயம், @ம மாதம் இயற்கை ரப்பர் உற்பத்தி 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 4.4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், உலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி 3.4 சதவீதம் அதிகரித்து 27.70 லட்சம் டன் என்ற அளவில் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இ@த காலத்தில், 26.80 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.சென்ற ஜூலை மாதத்தில், சர்வதேச அளவிலான இயற்கை ரப்பர் உற்பத்தி, 2 சதவீதம் அதிகரித்து 8.54 லட்சம் டன் என்ற அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் ( 9.24 லட்சம் டன்), செப்டம்பர் மாதம் 4.6 சதவீதம் (9.92 லட்சம் டன்) என்ற அளவிலும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், உலக இயற்கை ரப்பர் உற்பத்தி 4.9 சதவீதம் அதிகரித்து 99.60 லட்சம் டன்னாக உயரும் என்று, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. உலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், இந்நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி 33.50 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா 29.50 லட்சம் டன் இயற்கை ரப்பரை உற்பத்தி செய்து, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ம@லஷியா மூன்றாவது இடத்தையும், இந்தியா, 8.99 லட்சம் டன் இயற்கை ரப்பரை உற்பத்தி செய்து, நான்காவது இடத்தையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, சென்ற ஜூன் மாதம் 4 சதவீதம் உயர்ந்து 59 ஆயிரத்து 200 டன்னாக அதிகரித்துள்ளது. இது,சென்ற ஆண்டு இ@த மாதத்தில் 56 ஆயிரத்து 850 டன்னாக இருந்தது. இ@த மாதங்களில் உள்நாட்டில் ரப்பர் பயன்பாடு, 6 சதவீதம் அதிகரித்து 75ஆயிரத்து 450 டன்னில் இருந்து, 80 ஆயிரத்து 500 டன்னாக உயர்ந்துள்ளது.எனினும், @தசிய ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் @பாது, ஜூன் மாதம் இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் இயற்கை ரப்பர் உற்பத்தி 59ஆயிரத்து 700 டன் என்ற அளவில் இருந்தது. இதே @பால், இயற்கை ரப்பர் பயன்பாடும் 81ஆயிரம் டன் என்ற அளவில் இருந்து, 80ஆயிரத்து 500 டன்னாக குறைந்துள்ளது.சென்ற ஜூன் மாதம்,இந்தியாவின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி 3,104 டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 618 டன்னாக இருந்தது. மே மாதம் இயற்கை ரப்பர் ஏற்றுமதி 1,742 டன் என்ற அளவில் இருந்தது.ஏற்றுமதியை @பால், இயற்கை ரப்பர் இறக்குமதியும் சென்ற ஜூன் மாதம் 60 சதவீதம் உயர்ந்து, 19ஆயிரத்து 118 டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 11ஆயிரத்து 985 டன் என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டு @ம மாதம் இயற்கை ரப்பர் இறக்குமதி, 16 ஆயிரத்து 293 டன்னாக இருந்தது. இது,முந்தைய ஏப்ரல் மாதத்தை விட, 16 சதவீதம் அதிகமாகும்.உள்நாட்டில் இயற்கை ரப்பர் இருப்பு, சென்ற ஜூன் மாத நிலவரப்படி 37 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 47ஆயிரத்து 442 டன்னாக உள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரத்து 697 டன் என்ற அளவில் குறைவாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)