பதிவு செய்த நாள்
07 ஆக2011
00:06
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.35 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரத்து 45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 11 ஆயிரத்து 479 கோடி ரூபாயாக இருந்தது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா), வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே காலத்தில், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 27.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,020 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின், பிரிமிய வருவாய், 18.9 சதவீதம் அதிகரித்து, 8,025 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும், நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், ஜூன் வரையிலான காலாண்டில், 28.5 சதவீதம் குறைந்து, 18 ஆயிரத்து 281 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 25 ஆயிரத்து 521 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|