பதிவு செய்த நாள்
07 ஆக2011
00:07
சென்னை: கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், மொபைல் போன் தயாரிப்பிற்காக, சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரத்தில், 300 கோடி ரூபாய் திட்டச் செலவில், தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் சுதிர் ஹசீஜா, 'தினமலர்' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:கார்பன் மொபைல்ஸ் நிறுவனம் தற்போது, இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில், மொபைல் போன்களை தைவான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து, ஆர்டரின் பேரில், இறக்குமதி செய்து விற்பனை மேற்கொண்டு வருகிறது. தற்போது, நிறுவனத்தின், கார்பன் மொபைல்களுக்கு, அதிக வரவேற்பு உள்ளது. இந்தியச் சந்தையில், 6 சதவீத அளவிற்கு சந்தை பங்களிப்பை கொண்டுள்ளோம். இங்கு உற்பத்தி தொடங்கிய பிறகு, சந்தை பங்களிப்பு 8 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். தற்போது, நிறுவனத்திற்கு பெங்களூரு மற்றும் டில்லி ஆகிய இடங்களில், வடிவமைப்பு மையங்கள் உள்ளன. தமிழக அரசு, இங்கு தொழில்தொடங்க அனைத்து விதமான உதவிகளையும் செய்துத் தருவதாக கூறியுள்ளது. எனவே, தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க, நிறுவனம் ஆர்வமாக உள்ளது. இத்தொழிற்சாலை மூன்று கட்டமாக உருவாக்கப்படும். முதல் கட்ட நடவடிக்கை, 70 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். மூன்றாவது கட்டம் நிறைவடையும் போது மொத்த முதலீடு 300 கோடி ரூபா# என்ற அளவில் இருக்கும். தொழிற்சாலை முழு அளவில் செயல்படும் போது, மாதம் ஒன்றுக்கு 10 லட்சம் மொபைல் போன்கள் உற்பத்தி செய்ய முடியும். முதல் கட்டப் பணிகள் நிறைவடையும் போது, தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மாதம் ஒன்றுக்கு, 2 லட்சம் என்ற அளவில் இருக்கும்.வெளிநாடுகளிலிருந்து, தற்போது, மாதம் ஒன்றுக்கு, நிறுவனத்தின் பிராண்டு பெயரில், 9 லட்சம் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், 8 லட்சம் மொபைல் போன்கள், உள்நாட்டு விற்பனைக்கும், 1 லட்சம் சாதனங்கள், இலங்கை, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.'3ஜி அண்ட்ராய்டு' இயக்கத் தொகுப்பில் செயல்படக்கூடிய பல்வேறு மொபைல் போன்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் வகையில், 1,500 முதல் 7,000 ரூபாய் வரையிலான விலையில், 25க்கும் @மற்பட்ட மாடல்களில் மொபைல் @பான்கள் விற்பனை செய்யப்படுகின்றன.சென்னையைச் சேர்ந்த எங்கள் குடும்பம், பல ஆண்டுகளாக, மின்னணு சாதனங்கள் துறையில் ஈடுபட்டு வருகிறது. 1975களில், தொலைக்காட்சி பெட்டிகள் விற்பனை தொடங்கியது. அப்போது, 'டிவி' தொடர்பான அனைத்து விதமான சாதனங்களை விற்பனை öŒ#யத் தொடங்கினோம். பின்பு, 1996ம் ஆண்டு இந்தியாவில் மொபைல் போன் சேவை அறிமுகமனது. இத்துறைக்குள்ள வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இத்தொழிலில் களமிறங்கினோம். 2008ம் ஆண்டு, கார்பன் மொபைல் நிறுவனம் தொடங்கப்பட்டது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நிறுவனத்தின் விற்பனை வருவாய், 1,300 கோடி ரூபாயாக இருந்தது. இதை நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, சுதிர் ஹசீஜா பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|