பதிவு செய்த நாள்
08 ஆக2011
00:04
புதுடில்லி: இந்திய மருத்துவ சுற்றுலா துறையின் சந்தை மதிப்பு வரும் 2015ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்து, 10ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயரும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பு (அசோசெம்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் பலதரப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதில் திறமையான மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மேலும், நாட்டில் அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், எண்ணற்ற நோய்களுக்கு தீர்வளிக்கக் கூடிய மருந்துகள், சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. இவையெல்லாவற்றையும் விட, இந்தியாவில் இதயநோய், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்புக் கோளாறுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான மருத்துவ சிகிச்சைகள், பிற நாடுகளை விட குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலா என்றழைக்கப்படும் இத்துறையின் வாயிலாக தற்போது 4,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 8.5 லட்சம் பேர் பலதரப்பட்ட நோய்கள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றுக்காக இந்தியா வருகின்றனர்.நாட்டில் அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் மட்டுமின்றி, பாரம்பரியமான முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் யோகா, தியானம் போன்றவற்றை பயிற்றுவிக்கும் மையங்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர, பல்வேறு நோய்களை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தக் கூடிய ஆயுர்வேதம், சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இந்தியா, உலகப் புகழ் பெற்ற நாடாக விளங்குகிறது. இத்தகைய பாரம்பரிய சிகிச்சை முறையில் நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உலகின் பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்தியா வருகின்றனர். இதனால், வரும் 2015ம் ஆண்டில், நாட்டின் மருத்துவ சுற்றுலாத் துறையின் சந்தை மதிப்பு இரு மடங்கு அதிகரித்து, 10ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயரும் என்று அசோசெம் மதிப்பிட்டுள்ளது. மேலும், இதே கால கட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்காக நம் நாட்டிற்கு வருவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 32 லட்சமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் மல்டி ஸ்பொஷலிட்டி மருத்துவமனைகளை அரசு மற்றும் தனியார் கூட்டுடன் அதிகளவில் அமைக்க வேண்டும் என்று அசொசெம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,மகாராஷ்டிரா மற்றும் புதுடில்லி ஆகிய மாநிலங்கள் மிகச் சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளன. இங்கு சர்வதேச தரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்கக் கூடிய மிகச் சிறந்த மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. இவற்றுடன், மேலும் பல மருத்துவமனைகளை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களைப் பின்பற்றி, பிற மாநிலங்களிலும், சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்று அசெசெம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுடன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர். எனினும், மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவிற்கு கடும் போட்டியாக ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர், கிரீஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகள் விளங்குகின்றன. அதனால், சென்னை, கொச்சி, ஐதராபாத், ஜெய்ப்பூர்,பெங்களுர்,அகமதாபாத், புதுச்சேரி, புதுடில்லி, சண்டிகர், புனே ஆகிய 10 பகுதிகளை 'பன்முக சிறப்பு ஆரோக்கிய நகரம்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கூட்டுடன் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அசொசெம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், பாதுகாப்பான சுற்றுச் ‹ழலுடன், சிறந்த மருத்துவ வல்லுனர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் ஆற்றல் கொண்ட மருத்துவ பணியாளர்கள் ஆகியோருடன், நியாயமான கட்டணம் வ‹லிப்பதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய மருத்துவமனைகளை தனியார் கூட்டுடன் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அசொசெம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|