பதிவு செய்த நாள்
08 ஆக2011
14:08
சென்னை : உலக பங்குச் சந்தைகள், கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440ம், பார் வெள்ளி விலை ரூ.2340ம் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2357 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.25210 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.18856 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70 க்கும், பார் வெள்ளி விலை ரூ.60490 ஆகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|