பதிவு செய்த நாள்
09 ஆக2011
00:04
சென்னை: அடிப்படைக் கட்டமைப்புத் துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மார்க் குழுமம், காரைக்காலில் 93 கோடி ரூபா# மதிப்பீட்டில், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக, மத்திய அர” - தனியார் கூட்டுடன், 'புரா' என்ற இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில், மத்திய அரசின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலும், நிறுவனத்தின் பங்களிப்பு மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவிலும் இருக்கும்.இத்திட்டம் குறித்து, மார்க் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜி.ஆர்.கே.ரெட்டி கூறியதாவது:மார்க் குழுமத்தின், மார்க் காரைக்கால் துறைமுகப் பணிகள் வாயிலாக, பிராந்தியம் வளம் பெறும். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிந்தனையில் உருவான, 'புரா' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், காரைக்கால் மாவட்டத்தில், 8 கிராமப் பஞ்சாயத்துகள், நகர்ப்புற வசதிகள் கொண்டதாக உருவெடுக்கும்.இங்குள்ள, 31ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் மேம்படும். அவர்கள் பல்வேறு வேலைவா#ப்புகளைப் பெறுவதற்கு, தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். குடிநீர்த் திட்டம், மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் வடிகால் திட்டம், வேளாண் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் மரபு சாரா எரிசக்தி தீர்வுகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். இவ்வாறு ரெட்டி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|