மஞ்சள் விலை உயராததால் விவசாயிகள் ஏக்கம் மஞ்சள் விலை உயராததால் விவசாயிகள் ஏக்கம் ... அமெரிக்காவின் கடன் தகுதி குறைக்கப்பட்டதால் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' மேலும் 316 புள்ளிகள் வீழ்ச்சி அமெரிக்காவின் கடன் தகுதி குறைக்கப்பட்டதால் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' மேலும் 316 ... ...
நடப்பாண்டு ஜூன் மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 565 கோடி டாலராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2011
00:09

புதுடில்லி: நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, சென்ற ஜூன் மாதத்தில், கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவாக, 565 கோடி டாலரை (25 ஆயிரத்து 990 கோடி ரூபாய்) எட்டியுள்ளது. இது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்தில் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, சென்ற 2010ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் 138 கோடி டாலராக (6,348 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, அன்னிய நேரடி முதலீடு சென்ற ஜூன் மாதத்தில், 310 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2011ம் ஆண்டு மே மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 466 கோடி டாலராக (21 ஆயிரத்து 436 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது. இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, 111 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு 1,344 கோடி டாலராக (61 ஆயிரத்து 824 கோடி ரூபாய்) உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில், 577 கோடி டாலராக (26 ஆயிரத்து 542 கோடி ரூபாய்) குறைந்து காணப்பட்டது. ஆக, சென்ற ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 133 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, தற்போது வரையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், முதல் ஆறு மாதங்களில், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 57 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,683 கோடி டாலராக (77 ஆயிரத்து 418 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சர்வ@தச அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்கு உள்ளதால் பல அன்னிய நிறுவனங்களும் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இந்நிலையில் அன்னிய நேரடி முதலீடும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2008ம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 25 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்தது.உலக பொருளாதார நெருக்கடியால், 2008-09 ஆண்டில், 2,730 கோடி டாலராக இருந்த அன்னியச் செலாவணி வரத்து, 2009-10ம் ஆண்டு 2,560 கோடி டாலராகவும், 2010-11ம் நிதியாண்டில், 1,943 கோடி டாலராகவும் மிகவும் குறைந்து போனது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)