பதிவு செய்த நாள்
09 ஆக2011
10:10
சென்னை : சர்வதேச சந்தையில் தங்கம் விலை, தினம் ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருவதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில், நேற்று காலையில் கிராமுக்கு, 94 ரூபாய் அதிகரித்து, மதியத்தில், 44 ரூபாய் சரிவு ஏற்பட்டது. பத்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு, தற்போது தங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களாக, நிமிடத்துக்கு நிமிடம் தங்கம் விலையில், மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நேற்று, தங்கத்தின் விலை கிராமுக்கு, 52 ரூபாயும், பவுனுக்கு, 416 ரூபாயும் உயர்ந்தது. சர்வதேச சந்தையில், கடந்த வாரம் தங்கம் அவுன்ஸ், 1,680 டாலராக இருந்தது. நேற்று, 27 டாலர் அதிகரித்து, 1,707 டாலராக உயர்ந்தது. இந்திய ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலரின் மதிப்பு, 44.99 ஆக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் கிராம், 2,300 ரூபாய்க்கும், பவுன் ,18 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்றது. நேற்று காலை கிராமுக்கு, 94 ரூபாயும், பவுனுக்கு, 752 ரூபாயும் உயர்ந்தது. மதியம் கிராமுக்கு, 40 ரூபாயும், பவுனுக்கு, 320 ரூபாயும் சரிந்து, கிராம், 2,352 ரூபாயும், பவுன் 18 ஆயிரத்து 816 ரூபாயும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து, நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது வரலாறு காணாத வகையில், கிராம் 1, 513 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், அதிகபட்சமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், இனி பண்டிகை 'சீஸன்' என்பதால், இதன் விலை மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிறிய அளவிலான வியாபாரிகள், இத்தொழிலை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடர் விலை உயர்வால், விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|