இன்றும் சரிவில் முடிந்தது வர்த்தகம்இன்றும் சரிவில் முடிந்தது வர்த்தகம் ... 'சென்செக்ஸ்' 71 புள்ளிகள் குறைவு 'சென்செக்ஸ்' 71 புள்ளிகள் குறைவு ...
ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2011
16:39

திருநெல்வேலி: தமிழகத்தில் புதிய ஆட்டோக்களுக்கான பெர்மிட் பெற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டபேரவை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி புதிதாக ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க தடை விதித்து கடந்த மார்ச் 8ம் தேதி தேர்தல் அதிகாரி பிரவின்குமார் உத்தரவிட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் தடை நீக்கப்பட்டு பெர்மிட் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வராக ஜெ.,பொறுப்பேற்ற பின்னர் 10 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஆட்டோ பெர்மிட் பின்னர் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் டீசல் ஆட்டோக்களால் மாசுஏற்படுவதை தடுப்பதற்காக எல்.பி.ஜி.,கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் டீசல் ஆட்டோக்கள் இயங்குகின்றன. அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஆட்டோக்களின் சேவையும் இன்றியமையாததாகிவிட்டது. வேறு தொழில் இல்லாதவர்கள் ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் இல்லாததால் பலரும் ஏற்கனவே பெர்மிட் வைத்துள்ள ஆட்டோக்களுக்காக கூடுதலாக 70 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பஜாஜ், மகிந்திரா, டிவிஎஸ், பியாஜியோ உள்ளிட்ட ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றிற்கு சுமார் 3 ஆயிரத்து 500 ஆட்டோக்களை தயாரிக்கின்றன. இவற்றிற்காக கோடிக்கணக்கில் வரியும் செலுத்தப்படுகிறது. தற்போது பெர்மிட் வழங்காததால் புதிதாக ஆட்டோக்கள் வாங்கியவர்களின் நிலை சிக்கலில் உள்ளது. தமிழக அரசின் திட்டங்களின்படி தாட்கோ, டிட்கோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட்டோ வாங்கி தொழில் செய்ய கடனுதவி கிடைத்தும் கூட பெர்மிட் இல்லாததால் புதிதாக ஆட்டோ வாங்கி ஓட்டமுடியாத நிலையில்< உள்ளனர். இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் பல்வேறு தரப்பினரும் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் போலீசார் உள்பட ஆட்டோவை தொழிலாக செய்பவர்கள் ஒரு நபரே பல ஆட்டோக்களை இயக்குவதற்கு எதிர்ப்பு உள்ளது. இதனை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியாவது முறைகேடுகளை தடுக்கவேண்டும். இருப்பினும் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)