பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:47
மும்பை:பங்குச்ச ந்தையின் நிலையற்றபோக்கு, பங்குகள் மற்றும் ஓய்வூதி யம் ச õர்ந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங் களின் முதலாண்டு பிரிமிய வருவாய், 28ச தவீதம்ச ரிந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் செ யல்பாடு குறித்து ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. இதில், இந்நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய்28ச தவீதம்ச ரிந்து, 18 ஆயிரத்து 283கோடி ரூபாயாக குறைந்திருப்பது தெரிந்துள்ளது.அ ÷ தச மயம், இந்நிறுவனங்கள், சென்ற 2010 -11ம் நிதியாண்டின் இ ÷ த காலத்தில் புதிய பிரிமியம் வாயிலாக, 25 ஆயிரத்து 522கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக,ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி விகிதம்,அடுத்து வரும் காலாண்டுகளிலும் குறையும் என்று, இத்துறைச õர்ந்தவர்கள் தெரிவித்தனர்.சென்ற ஆண்டு நிலவரப்படி, தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் 90ச தவீத திட்டங்கள், பங்குச்ச ந்தை முதலீடுசார்ந்த 'யூலிப்' திட்டங்களாக இவை இருந்தன. பங்குச்ச ந்தையின்போக்கு நன்கு இருந்ததால், முதலீட்டாளர்களும், 'யூலிப்' திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். காப்பீட்டு முகவர்களும், அதிக தரகுத் தொகைக்காக,சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி ஏராளமான முதலீட்டாளர்களை இத்திட்டங்களில்சேர்த்து வந்தனர். இந்நிலையில், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா), 'யூலிப்'திட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், முகவர்களின் தவறான வாக்குறுதியால் முதலீட்டாளர்கள் ஏமாறுவதை தடுப்பதற்காகவும் பல்வேறு கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தது.இதன்படி, 'யூலிப்' திட்டங்களுக்கான வரம்புக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து, 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.மேலும், புதிய பிரிமியத்தின் கீழ், முகவர்களுக்கு வழங்கப்படும் தரகு கட்டணத்திற்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.இத்துடன் அனைத்து ஓய்வூதியம், பணிக் கொடைசார்ந்த காப்பீட்டு திட்ட முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் 4.5ச தவீத வட்டி வழங்கப்படும் என, நிறுவனங்கள் உறுதி அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சென்ற ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, காப்பீட்டு நிறுவனங்களின் 'யூலிப்' திட்டங்கள் வாயிலான புதிய பிரிமியம் வருவாய்சிறப்பாக இருந்தது. இந்நிலையில், 'இரிடா' அமைப்பின் புதிய விதிமுறைகள் செ ப்டம்பர் மாதம் அமலுக்கு வந்தன. இதையடுத்து, காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய்வளர்ச்சிச ரிவடையத் தொடங்கியது.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கன இவை விற்பனை செய்து வந்த,'யூலிப்' திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. புதிய விதிமுறைகளின் கீழ், 'யூலிப்' திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலை ஏற்பட்டது.மேலும், உடனடியாக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்கி, இரிடாவின் ஒப்புதலுக்கு அளித்த போதிலும், ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு ஓரிரண்டு திட்டங்களுக்கு மட்டு மே அனுமதி கிடைத்தது.ஓய்வூதிய காப்பீட்டு திட்டங்களில், குறைந்தபட்ச வருவாய்க்கு உத்தரவாதம் வழங்கவேண்டும் என்ற விதிமுறையால், நிறுவனங்களிடையே இவ்வகை திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆர்வம் குறைந்துபோனது. செ õற்ப நிறுவனங்கள் மட்டுமே இது போன்ற திட்டங்களை வெளியிட்டன.செ ன்ற நிதியாண்டின் முதல் காலாண்டில், தனிநபர் காப்பீட்டு திட்டங்களின் மொத்த புதிய பிரிமிய வருவாயில், 38ச தவீதம், ஓய்வூதிய திட்டங்களின் புதிய பிரிமியம் மூலம் கிடைத்தது. இது, இரண்டாவது காலாண்டின் இறுதியில் இருந்து குறையத் தொடங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள், புதிய விதிமுறைகளின் கீழ் 'யூலிப்' திட்டங்களை வினி யோகிப்பதற்கான பயிற்சியை முகவர்களுக்கு வழங்கியபோதிலும், குறைந்த தரகு கட்டணம் காரணமாக, முகவர்கள் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டது. இதனால், செ ன்ற ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், 'யூலிப்' மற்றும் ஓய்வூதிய காப்பீட்டு திட்டங்களின் புதிய பிரிமிய வருவாய்வளர்ச்சிச ரிவடையத் தொடங்கியது.அதேசமயம், இத்திட்டங்கள்சாராத, பாரம்பரிய காப்பீட்டு திட்டங்களின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. எனினும், ஒட்டுமொத்த அளவில், புதிய பிரிமிய வருவாய்வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க கடன் உச்ச வரம்பு பிரச்னை, ஐரோப்பிய நாடுகளின் கடன் ”மை, உள்நாட்டில் உயர்ந்து வரும் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறுஅம்ச ங்களும் காப்பீட்டுத் துறையை பாதிப்பதாக உள்ளன.முதலீட்டாளர்கள், வங்கிகளில் குறித்த கால வைப்புத் தொகை திட்டம் அல்லது கடன் பத்திர திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய்வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு:யூலிப், ஓய்வூதிய திட்டங்களின் பிரிமிய வருவாய்வளர்ச்சி குறைந்துள்ளபோதிலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் கை கொடுக்கும் மருந்தாக விளங்குகின்றன.எல்.ஐ.சி., நிறுவனம், செ ன்ற ஜூன் மாதம் 'ஜீவன் ஆரோக்யா என்ற, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை இத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மொத்தம், 3.60 லட்ச ம் ரூபாய் பாலிசிகளை விற்பனை செய்ய எல்.ஐ.சி., இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|