பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:50
கொச்சி:நாட்டின் ரப்பர் உற்பத்தி, செ ன்ற ஜூலை மாதத்தில் 62 ஆயிரத்து 700 டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த உற்பத்தியை விட 7ச தவீதம் (58 ஆயிரத்து 500 டன்) அதிகமாகும்.ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் பகுதிகளில் சிறந்த பருவநிலை நிலவி வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது.மேலும் இதன் விலை உயர்ந்ததால் ரப்பர் விவசாயிகள் அதிகளவில் ரப்பர் உற்பத்தியைமேற்கொண்டனர். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் ரப்பர் உற்பத்தி 2 லட்ச த்து 38 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது என தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 2 லட்ச த்து 25 ஆயிரத்து 250 டன்னாக இருந்தது.இதே காலத்தில் ரப்பர் பயன்பாடு, 3 லட்ச த்து 9 ஆயிரத்து 50 டன்னிலிருந்து, 3 லட்ச த்து 23 ஆயிரத்து 875 டன்னாக அதிகரித்துள்ளது.செ ன்ற ஜூலை மாதத்தில் ரப்பர் பயன்பாடும் 7.6ச தவீதம் அதிகரித்து 82 ஆயிரம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே மாதத்தில் ரப்பர் இறக்குமதி 20 ஆயிரத்து 127 டன்னாக இருந்தது. என வே தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு ரப்பர் உள்ளது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.செ ன்ற ஜூலை மாத நிலவரப்படி கையிருப்பில் 2 லட்ச த்து 47 ஆயிரத்து 490 டன் ரப்பர் உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1 லட்ச த்து 80 ஆயிரத்து 958 டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|