பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:56
புதுடில்லி:நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற ஜூலை மாதத்தில், 14 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 13 ஆயிரத்து 179 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 8 லட்சத்து 644 டன்னாக இருந்தது என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இருப்பினும், நடப்பு எண்ணெய் பருவத்தின் (நவம்பர் -அக்டோபர்) முதல் ஒன்பது மாதங்களில், தாவர எண்ணெய் இறக்குமதி 5 சதவீதம் சரிவடைந்து, 60 லட்சத்து 43 ஆயிரத்து 403 டன்னாக உள்ளது. இது, கடந்த எண்ணெய் பருவத்தின் இதே ஒன்பது மாதத்தில், 63 லட்சத்து 82 ஆயிரத்து 314 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.நடப்பு எண்ணெய் பருவத்தில், வரும் மாதங்களில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.நாட்டின் துறைமுகங்களில், ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, சமையல் எண்ணெய் இருப்பு, 5 லட்சத்து 60 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் ஆண்டு பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 3.11 கோடி டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|