பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:57
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 186 கோடியே 40 லட்சம் டாலர் (8,388 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 722 கோடியே 60 லட்சம் டாலராக (14 லட்சத்து 27 ஆயிரத்து 517 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 229 கோடி டாலர் (10 ஆயிரத்து 534 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து 900 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், வங்கிகளில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 184 கோடி டாலர் (8,280 கோடி ரூபாய்) அளவிற்கு சரிவடைந்துள்ளது. மேலும், சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு 296 கோடியே 30 லட்சம் டாலராக (13 ஆயிரத்து 333 கோடியே 50 லட்சம் ரூபாய்) உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை யடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|