கடந்த ஜூலை மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 14 சதவீதம் உயர்வுகடந்த ஜூலை மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 14 சதவீதம் உயர்வு ... பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து 3.33 லட்சம்பேர் விலகல் பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து ... ...
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.8,388 கோடி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2011
03:57

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 186 கோடியே 40 லட்சம் டாலர் (8,388 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 722 கோடியே 60 லட்சம் டாலராக (14 லட்சத்து 27 ஆயிரத்து 517 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 229 கோடி டாலர் (10 ஆயிரத்து 534 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து 900 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், வங்கிகளில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 184 கோடி டாலர் (8,280 கோடி ரூபாய்) அளவிற்கு சரிவடைந்துள்ளது. மேலும், சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு 296 கோடியே 30 லட்சம் டாலராக (13 ஆயிரத்து 333 கோடியே 50 லட்சம் ரூபாய்) உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை யடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)