பதிவு செய்த நாள்
14 ஆக2011
10:04
தேனி : வேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன. தேனி மாவட்டத்தில் தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் வேண்டாத பொருளாக கருதப்பட்டு வந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் மொத்தமாக கொட்டி தீ வைத்து வந்தனர். தற்போது இக்கழிவுகள் அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் கூறியதாவது: தென்னை உரிமட்டையில் இருந்து தயாராகும் மஞ்சு (தும்பு) தனது எடையை விட ஆறு மடங்கு அதிக தண்ணீரை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். எனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள அரபு நாடுகளில் மரங்களை சுற்றி இந்த தென்னை மஞ்சுவை கொட்டி நீர் பாய்ச்சுகின்றனர். நீரை குடித்துக் கொள்ளும் மஞ்சு பலநாள் ஈர நிலையில் இருக்கும். இதனால் மரங்கள் வேர்கள் மூலம் மஞ்சுவிடம் இருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன. புதிய தொழில்நுட்பம் அரபு நாடுகளின் அதிகளவில் கடைபிடிக்கப்படுகிறது. எனவே தேனி மாவட்டத்தில் இருந்து தென்னை நார் கழிவுகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன,'என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|