பதிவு செய்த நாள்
14 ஆக2011
12:13
மும்பை : நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்தில் செக் மூலமான பண பரிவர்த்தனை 13.9 சதவீதம் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் செக் மூலம் ரூ.7.19 லட்சம் கோடி மட்டுமே பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக ரிவர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வங்கிகள் செக் மூலம் பண பரிவர்த்தனை செய்த தொகை ரூ.8.35 லட்சம் கோடியாகும். ஜூன் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் வங்கிகள் சரிசெய்த செக் எண்ணிக்கை 10.62 கோடியாகும். இருப்பினும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 11.04 கோடி செக்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் செக் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.24.06 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.25.17 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|