பதிவு செய்த நாள்
15 ஆக2011
03:17
சென்னை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், பஸ், மற்றும் கனரக வாகனங் களுக்கான டயர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரி நீக்கப்பட்டுள்ளது. இத னால், இவ்வகை டயர்களின் விலை, 4,000 முதல் 6,000 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பஸ் மற்றும் கனரக வாகனங்களின் டயர் இறக்குமதி மீது 32 டாலர் முதல் 90 டாலர் வரை பொருள் குவிப்பு வரி விதித்தது. இதனால், வெளிநாடுகளின் போட்டி குறைந்ததால், உள்நாட்டு டயர் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை அதிக அள வுக்கு உயர்த்தின. இந்நிலையில், ரப்பர் உற்பத்தி அதிகரித்து, ரப்பரின் விலையும் குறைந்தது. ஆனால் உள்நாட்டில் டயர்களின் விலை கடந்த 18 மாதங்களில் 21 சதவீதம் வரை அதிகரித்தது.இதைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும், பஸ், மற்றும் கனரக வாகன டயர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான முறையீட்டை சுங்கம், கலால் மற்றும் சேவை வரி தீர்ப்பாயம் விசாரித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், பஸ், மற்றும் கனரக வாகன டயர் இறக்குமதி மீதான பொருள் குவிப்பு வரியை நீக்கி, தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனா, தாய்லாந்து போன்ற நாடு களிலிருந்து, இந்தியாவிற்கு அதிகளவில் டயர் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. விலை குறைந்த இந்த டயர் களால் உள்நாட்டில், டயர் உற்பத்தி தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்தே, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் டயர் மீது பொருள் குவிப்பு வரி விதித்தது. தற்போது, இந்த வரி ரத்து செய்யப்பட்டதன் மூலம், உள் நாட்டில் டயர் விலை குறையும் என்பதுடன், சரக்கு போக்குவரத்து கட்டணமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|