குறைகிறது செக் மூலமான பண பரிவர்த்தனைகுறைகிறது செக் மூலமான பண பரிவர்த்தனை ... பயோமாஸ் மின் உற்பத்தி துறை சந்தித்து வரும் பிரச்னைகள்:தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா? பயோமாஸ் மின் உற்பத்தி துறை சந்தித்து வரும் பிரச்னைகள்:தமிழக அரசு ... ...
பொருள் குவிப்பு வரி நீக்கம்: கனரக வாகன டயர் விலை ரூ.6,000 குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
03:17

சென்னை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், பஸ், மற்றும் கனரக வாகனங் களுக்கான டயர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரி நீக்கப்பட்டுள்ளது. இத னால், இவ்வகை டயர்களின் விலை, 4,000 முதல் 6,000 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பஸ் மற்றும் கனரக வாகனங்களின் டயர் இறக்குமதி மீது 32 டாலர் முதல் 90 டாலர் வரை பொருள் குவிப்பு வரி விதித்தது. இதனால், வெளிநாடுகளின் போட்டி குறைந்ததால், உள்நாட்டு டயர் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை அதிக அள வுக்கு உயர்த்தின. இந்நிலையில், ரப்பர் உற்பத்தி அதிகரித்து, ரப்பரின் விலையும் குறைந்தது. ஆனால் உள்நாட்டில் டயர்களின் விலை கடந்த 18 மாதங்களில் 21 சதவீதம் வரை அதிகரித்தது.இதைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும், பஸ், மற்றும் கனரக வாகன டயர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான முறையீட்டை சுங்கம், கலால் மற்றும் சேவை வரி தீர்ப்பாயம் விசாரித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், பஸ், மற்றும் கனரக வாகன டயர் இறக்குமதி மீதான பொருள் குவிப்பு வரியை நீக்கி, தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனா, தாய்லாந்து போன்ற நாடு களிலிருந்து, இந்தியாவிற்கு அதிகளவில் டயர் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. விலை குறைந்த இந்த டயர் களால் உள்நாட்டில், டயர் உற்பத்தி தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்தே, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் டயர் மீது பொருள் குவிப்பு வரி விதித்தது. தற்போது, இந்த வரி ரத்து செய்யப்பட்டதன் மூலம், உள் நாட்டில் டயர் விலை குறையும் என்பதுடன், சரக்கு போக்குவரத்து கட்டணமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)