பதிவு செய்த நாள்
15 ஆக2011
09:21
புதுடில்லி : 'ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு, எந்தவித இடையூறுமின்றி, விமான எரிபொருளை வழங்க வேண்டும்'என, பெட்ரோலிய அமைச்சகத்தை, விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்களுக்கு, எரிபொருள் வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த பிரச்னைக்கு முடிவு காணும் வகையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவியும், பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து, விமான போக்குவரத்துத் துறை செயலர் நசிம் ஜய்தி, பெட்ரோலிய அமைச்சகத்துக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், 'ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்களுக்கு, எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து, எரிபொருட்களை வழங்க வேண்டும். எரிபொருளுக்கான தொகையைச் செலுத்துவதில், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல், எரிபொருள் வழங்க வேண்டும். எரிபொருளுக்கான தொகையை, தினந்தோறும் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|