நடப்பு கரீப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிப்புநடப்பு கரீப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு ... கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல் விற்பனையில் இழப்பில்லை கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல் விற்பனையில் இழப்பில்லை ...
ஏப்ரல் - மே மாதங்களில் இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
03:31

புதுடில்லி:நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்), 22.80 சதவீதம் சரிவடைந்து, 1.75 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 2.28 கோடி டன் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டதாக, இந்திய கனிம தொழிலக கூட்டமைப்பின் தற்காலிக புள்ளி விவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதியில்,மூன்றாவது பெரிய மாநிலமாக, கர்நாடகா விளங்குகிறது. இம்மாநிலத்தில், இரும்புத்தாது வெட்டி எடுப்பது மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தடைவிதிக்கப் பட்டது. இதன் காரணமாக, சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, 19 சதவீதம் சரிவடைந்து, 9.50 கோடி டன்னாக குறைந்துபோனது. கடந்த 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல்-மே மாத காலத்தில், தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து, குறிப்பாக, சென்னை, கிருஷ்ணபட்டினம், மற்றும் பெல்லிகேரி துறைமுகங்களிலிருந்து, 10 லட்சம் டன்னிற்கும் அதிகமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டிருந்து. ஆனால், நடப்பு நிதியாண்டின், இதே மாதங்களில், இத்துறைமுகங் களிலிருந்து, இரும்புத்தாது ஏற்றுமதி மேற்கொள்ளப்படவில்லை. புதிய மங்களூர், காக்கிநாடா, எண்ணூர், கார்வார், ரெடிகாவ் உள்ளிட்ட ஏனைய துறைமுகங்களிலிருந்தும், இரும்புத் தாது ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளது.இருப்பினும், கிழக்கு கடற்கரை துறைமுகங்களான, ஹால்டியா, பரதீப், கங்காவரம், விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து இரும்புத்தாது அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஒடிசா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களின் இரும்புத் தாது பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது தான் காரணம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)