பதிவு செய்த நாள்
16 ஆக2011
03:31
புதுடில்லி:நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்), 22.80 சதவீதம் சரிவடைந்து, 1.75 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 2.28 கோடி டன் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டதாக, இந்திய கனிம தொழிலக கூட்டமைப்பின் தற்காலிக புள்ளி விவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதியில்,மூன்றாவது பெரிய மாநிலமாக, கர்நாடகா விளங்குகிறது. இம்மாநிலத்தில், இரும்புத்தாது வெட்டி எடுப்பது மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தடைவிதிக்கப் பட்டது. இதன் காரணமாக, சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, 19 சதவீதம் சரிவடைந்து, 9.50 கோடி டன்னாக குறைந்துபோனது. கடந்த 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல்-மே மாத காலத்தில், தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து, குறிப்பாக, சென்னை, கிருஷ்ணபட்டினம், மற்றும் பெல்லிகேரி துறைமுகங்களிலிருந்து, 10 லட்சம் டன்னிற்கும் அதிகமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டிருந்து. ஆனால், நடப்பு நிதியாண்டின், இதே மாதங்களில், இத்துறைமுகங் களிலிருந்து, இரும்புத்தாது ஏற்றுமதி மேற்கொள்ளப்படவில்லை. புதிய மங்களூர், காக்கிநாடா, எண்ணூர், கார்வார், ரெடிகாவ் உள்ளிட்ட ஏனைய துறைமுகங்களிலிருந்தும், இரும்புத் தாது ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளது.இருப்பினும், கிழக்கு கடற்கரை துறைமுகங்களான, ஹால்டியா, பரதீப், கங்காவரம், விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து இரும்புத்தாது அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஒடிசா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களின் இரும்புத் தாது பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது தான் காரணம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|