பதிவு செய்த நாள்
16 ஆக2011
03:33
புதுடில்லி:சர்வதேச அளவில் கச்ச õ எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பில் இருந்துநேற்று முதல் மீண்டுள்ளன. இதனால், பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தின் கடைசி இரு வாரங்களில், இந்தியாவிற்கான, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 113.92 டாலர் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது 107 டாலராக குறைந்துள்ளது. இதனால், எண்ணெயை சந்தைப்படுத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனையில்சந்தித்து வந்த இழப்பில் இருந்து மீண்டுள்ளன. இந்நிறுவனங்கள், ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில், 70 பைசா என்ற அளவில் இழப்பைசந்தித்து வந்தன. கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால், இழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்நிறுவனங்கள் ஒரு லிட்டர் டீசல் விற்பனையில்சந்தித்து வந்த இழப்பில் ஒரு ரூபாய் குறைந்துள்ளது. இதுவரை ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 6.06 ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இது, தற்போது ஒரு ரூபாய் குறைந்து, 5.06 ரூபாயாக உள்ளது.இழப்பில் இருந்து விடுபட்டுள்ள எண்ணெய் நிறுவனங்கள், எப்போது, பெட்ரோல் விலையை குறைக்கும் என்று வாகன ஓட்டுனர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|